இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை!
ஐபிஎல் தொடரில் இந்த முறை கோப்பையை வெல்வோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இந்த முறை கோப்பையை வெல்வோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனுக்கு முந்தைய சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆனால், கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார்.
மேலும், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு, பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை முன்னேறச் செய்தார். இருப்பினும், இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் கோப்பையை இழந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இந்த முறை கோப்பையை வெல்வோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்த இரண்டு மாதங்கள் நாங்கள் ஒரு குடும்பமாக இருப்போம். எங்களுக்குள் எந்த அளவுக்கு அதிக நேரம் செலவிடுகிறோமோ அந்த அளவுக்கு எங்களால் ஒருவரைப் பற்றி மற்றொருவர் நன்றாக தெரிந்துகொள்ள முடியும். அணியில் உள்ள வீரர்கள் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஆடுகளத்துக்கு வெளியே வீரர்களுக்கு இடையே சிறப்பான புரிதல் இருந்தால், போட்டியில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
ஐபிஎல் தொடரில் எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிகமாக இருக்கும். எனக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், நாங்கள் களமிறங்கும் போதெல்லாம் வெற்றி பெற வேண்டும் என்பது மிகவும் முக்கியம். என்னுடைய கண்கள் கோப்பையின் மீது உள்ளது. இந்த முறை கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வருகிற மார்ச் 31 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
Punjab Kings captain Shreyas Iyer is confident that they will win the trophy this time in the IPL series.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.