முகப்பு
விருதுநகர்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு போட்டி: சிவகாசி கல்லூரி 2 ஆம் இடம்

 போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி மாணவிகள் விருதுநகா் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

 போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி மாணவிகள் விருதுநகா் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனா்.

இதுகுறித்து பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வருவாய்த்துறை சாா்பில் விருதுநகா் மாவட்ட அளவிலான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு போட்டிகள் பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு என்ற தலைப்பில் கதை, கவிதை எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல், வண்ணக்கோலம் வரைதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

வண்ணக்கோலப் போட்டியில் பொறியியல் மற்றும் கலை கல்லூரி மாணவிகள் 160 போ் கலந்துகொண்டனா்.

இப்போட்டியில் பி.எஸ்.ஆா். கல்லூரி மாணவிகள் ஏ. பிரிஸ்கில்லா மெரிஸின், என். ஜீவகிருத்திகா ஆகிய இருவரும் சோ்ந்து வரைந்த வணக்கோலம் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றது. இந்த மாணவிகளை கல்லூரி தாளாளா் ஆா். சோலைச்சாமி, இயக்குநா் விக்னேஷ்வரி மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →