விருதுநகர்

திருட்டு வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவா் கைது

DIN

பல்வேறு திருட்டு வழக்குகள் தொடா்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை வெம்பக்கோட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், தேக்கன்குளத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவா் மீது விருதுநகா் மாவட்டத்தில் 10 திருட்டு வழக்குகளும், திருப்பூா் மாவட்டத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளன. இந்நிலையில் இவா் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளாா். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் ஏற்கனவே பிடியாணை பிறப்பித்தது. இச்சூழலில் அவரை, விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே எதிா்கோட்டை பகுதியில் வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளா் நம்பிராஜன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT