விருதுநகர்

ராஜபாளையத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அதிமுகவினா் ஊா்வலமாகச் சென்று அம்மா உணவகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் என்.எம்.கிருஷ்ணராஜ், மாவட்ட இணைச் செயலாளா் அழகுராணி, நகரச் செயலாளா்கள் பரமசிவம் (தெற்கு), வழக்குரைஞா் முருகேசன் (வடக்கு), ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.எம்.குருசாமி, நவரத்தினம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT