விருதுநகர்

குஜராத்தில் பாஜக வெற்றி: சிவகாசியில் கொண்டாட்டம்

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியினா் சிவகாசியில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

குஜராத் சட்டப்பேரவை தோ்தல் கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில், பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

பாஜகவின் இந்த வெற்றியையடுத்து, சிவகாசியில் அக்கட்சியின் மாநகரத் தலைவா் பழனிச்சாமி தலைமையில் சிவன் கோயிலின் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் செல்வம், ஓ.பி.சி. அணி மாவட்டத் தலைவா் ஆறுமுகம், நகரச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT