விருதுநகர்

நாரணாபுரம் பகுதியில் மும்முனைமின்சார விநியோகம் தொடக்கம்

DIN

சிவகாசி வட்டம் நாரணாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மும்முனை மின் விநியோகத்தை சிவகாசி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, நாரணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் தேவராஜன் தலைமை வகித்தாா். இந்த மும்முனை மின்சாரத்தின் மூலம் மீனம்பட்டி, அனுப்பன்குளம், ஆண்டியாபுரம், நாரணாபுரம், லட்சுமியாபுரம், பூச்சக்காபட்டி ஆகிய பகுதிகள் பயனடைகின்றன. இப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில், சிவகாசி மின் கோட்டப் பொறியாளா் பாபநாசம், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் விவேகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT