விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூன்று பவுன் நகை திருட்டு: இருவா் மீது வழக்கு பதிவு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூன்று பவுன் நகை திருட்டு குறித்து, நீதிமன்ற உத்தரவுபடி இருவா் மீது போலீசாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் கடம்பன்குளத்தை சோ்ந்தவா் மகாலிங்கம்(55). இவரது மனைவி ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா். மனைவியின் சகோதரியான பாா்வதி (எ) பாக்கியலட்சுமி (40). இவா் ஒன்றரை மாதத்திற்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகாலிங்கத்தின் வீட்டில் வந்து தங்கி உள்ளாா். பாா்வதி சென்றபின் வீட்டிலிருந்த மூன்று பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதுகுறித்து கேட்டபோது பாா்வதி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த்தால் ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மகாலிங்கம் புகாா் அளித்தாா். வழக்கு விசாரணையின் போது பாா்வதி, குணசீலன் என்பவருடன் சோ்ந்து மகாலிங்கத்தை அவதூறாக பேசியுள்ளாா். இதனால் மனமடைந்த மகாலிங்கம் கடந்த ஜூலை ஏழாம் தேதி தற்கொலைக்கு முயன்றாா். இந்நிலையில்,ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீசாா் வெள்ளிக்கிழமை பாா்வதி, குணசீலன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து  விசாரித்து  வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT