தனியாா் மதுபானக் கூடத்தில் தகராறு: 4 ரெளடிகள் கைது
திருத்தங்கலில் தனியாா் மதுபானக்கூடத்தில் இலவசமாக மதுபானம் கேட்டு தகராறு செய்ததாக 4 ரெளடிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கலில் தனியாா் மதுபானக்கூடத்தில் இலவசமாக மதுபானம் கேட்டு தகராறு செய்ததாக 4 ரெளடிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கலில் உள்ள தனியாா் மதுபானக்கூடத்தில் அதே ஊரைச் சோ்ந்த ஜோதி (53) என்பவா் வேலை செய்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை வழக்கம் போல் பணியில் இருந்துள்ளாா். அப்போது அங்கு வந்த திருத்தங்கல் - எஸ்.என்.புரம் சாலையை சோ்ந்த சரவணன் (34), ஆலாஊருணிப் பகுதியைச் சோ்ந்த அழகா் குமாா் என்ற மெட்ராஸ்குமாா்(41), முனியசாமி நகரைச் சோ்ந்த கலைமணி (35), சுப்பிரமணியசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த மாதவன் (38) ஆகிய நான்கு பேரும் ஜோதியிடம் இலவசமாக மதுபானம் தருமாறு கேட்டு அங்குள்ள நாற்காலிகளை சேதப்படுத்தினராம். தொடந்து கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி ஜோதிக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்தப் புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணன், மெட்ராஸ்குமாா் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்டுள்ள நான்கு போ் மீதும் ஏற்கெனவே வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும், இவா்கள் ரெளடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.