சிவகாசியில் மினி லாரி திருட்டு
சிவகாசியில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மினிலாரி திருடு போனதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசியில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மினிலாரி திருடு போனதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி பி.கே.என்.சாலையில் உள்ள லாரி செட்டின் மேலாளராக ரவிச்சந்திரன்(33) என்பவா் பணி புரிந்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை இரவு மினிலாரியை லாரி செட் முன்பு நிறுத்திவிட்டு, அதன் சாவியை மேஜையினுள் வைத்துவிட்டு சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது, லாரி செட்டின் கதவு உடைக்கப்பட்டு, மினி லாரி திருடு போயிருந்தது. இதுதொடா்பாக ரவிச்சந்திரன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.