விருதுநகர்

சிவகாசியில் பைக் மோதி காவலாளி பலி

DIN

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

சிவகாசி இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னஆண்டி (60). தனியாா் நிறுவன காவலாளியான இவா் தனது சைக்கிளில் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சிவகாசியை நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் சின்ன ஆண்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ரிசா்வ்லைன் பகுதியைச் சோ்ந்த மகேஷ்வரன் (31) காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT