முகப்பு
விருதுநகர்

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி: ஸ்ரீவிலி., ராஜபாளையம் முதலிடம்

விருதுநகா் மாவட்டக் கைப்பந்து கழகம் சாா்பில், சிவகாசியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையிலான கைப்பந்து போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டக் கைப்பந்து கழகம் சாா்பில், சிவகாசியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையிலான கைப்பந்து போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் மாணவா்கள் பிரிவில் 14 அணிகளும், மாணவிகள் பிரிவில் 12 அணிகளும் கலந்துகொண்டன. போட்டியை, விருதுநகா் மாவட்டக் கைப்பந்து கழகத் தலைவா் சி. சண்முகநாதன் தொடக்கிவைத்தாா்.

இறுதிப் போட்டியில், மாணவா் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஜி.எஸ். ஹிந்து மேல்நிலைப் பள்ளி அணி முதலிடமும், ராஜபாளையம் ஆனந்த வித்யாலயா பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.

மாணவிகள் பிரிவில், ராஜபாளையம் சின்மயா வித்யாலாயா பள்ளிமுதலிடமும் , சிவகாசி ஒய்.ஆா்.டி.வி. மெட்ரிக்குலேஷன் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.

பரிசளிப்பு விழாவுக்கு, மதுரை கைப்பந்து பயிற்சியாளா் குமரேசன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் சித்ரா ஜெயந்தி பரிசு வழங்கினாா். சரவணக்குமாா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →