சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப்பணிகள் தொடரும்
சிவகாசி அருகே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடரும் என சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் தெரிவித்துள்ளாா்.
சிவகாசி அருகே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடரும் என சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதையடுத்து மத்திய ரயில்வே அமைச்சகம் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்புதல் கொடுத்தது. தொடந்து மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. இந்நிலையில் ரயில் கடவுப்பாதை அருகேயுள்ள தனிநபா் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனிநபா் ஒருவா் வழக்குத்தொடுத்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், பொதுமக்களுக்கு பயன் தரும் திட்டங்களுக்கு தடை போடும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். அதனால் மேம்பாலப்பணிகளைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.