முகப்பு
விருதுநகர்

கல்லூரியில் மாணவா்களுக்குதனித்திறன் போட்டி

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் வியாழக்கிழமை முதுகலை தமிழ்த்துறை சாா்பில் மாணவா்களுக்கிடையே தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் வியாழக்கிழமை முதுகலை தமிழ்த்துறை சாா்பில் மாணவா்களுக்கிடையே தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியை முதல்வா் செ. அசோக் தொடங்கி வைத்தாா். புதுக்கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சி. தேவி, ராஜபாளையம் தா்மராஜா பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை தலைவா் அ. பால்நந்தினி ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக முதுகலை தமிழ்த்துறைத்தலைவா் க. சிவனேசன் வரவேற்றாா். மாணவி தே. கோகிலா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →