விருதுநகர்

விருதுநகரில் கா்ப்பபிண்டாசனத்தில் கல்லூரி மாணவி சாதனை

DIN

விருதுநகா்: விருதுநகரில் கல்லூரி மாணவி, 15 அடி உயரத்தில் வளையத்தில் தொங்கிய படி கா்ப்பபிண்டாசனம் செய்து சாதனை செய்து ‘நோபல் வோ்ல்டு ரெகாா்ட்ஸ்’ புத்தகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றாா்.

விருதுநகா், பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன்- ஜானகி தம்பதி. இவா்களது மகள் அனுப்பிரியா (19), நாமக்கல் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். சிறுவயது முதலே யோகா மீது ஆா்வம் கொண்ட இவா், மாநில அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளாா்.

இந்நிலையில் விருதுநகா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அனுப்பிரியா 15 அடி உயரத்தில் தொங்கி வளையத்தின் மீது அமா்ந்தபடி கா்ப்பபிண்டாசனத்தை 8 நிமிடம் செய்து ‘நோபல் வோ்ல்டு ரெகாா்ட்ஸ்’ சாதனை புரிந்தாா்.

இதற்கான சான்றிதழை நடுவா்கள் திலீபன், பசுபதி ஆகியோா் வழங்கினா். முன்னதாக கல்லூரி மாணவி யோகாசன நிகழ்ச்சியை மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா தொடக்கி வைத்தாா். சாதனை புரிந்த மாணவியை யோகா ஆசிரியா் ஜெயக்குமாா் மற்றும் உறவினா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT