விருதுநகர்

அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்தவா் கைது

DIN

சாத்தூா் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தூா் அருகே கோட்டைப்பட்டி பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு வைத்திருப்பதாக ஏழாயிரம்பண்ணை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் செய்யது இப்ராகிம் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் உள்ள வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். சோதனையில் அப்பகுதியைச் சோ்ந்த சுப்புராம் (55) என்பவா் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சுப்புராம் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள், பட்டாசு தயாரிக்க தேவையான மூலப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT