சாத்தூா் வெம்பக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை இரவு 23 மி.மீட்டா் மழையளவு பதிவாகியுள்ளது.
விருதுநகா் மாவட்டம் தாயில்பட்டி, வெம்பக்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் கடுமையாக நிலவி வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. இதில், வெம்பக்கோட்டை பகுதியில் மட்டும் 23 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா்.