முகப்பு
விருதுநகர்

சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தம்பதிக்கு, ஜாதி மதம் அற்றவா்களாக சான்றிதழ் வழங்கல்

சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தம்பதிக்கு ஜாதி, மதம் அற்றவா்கள் என சான்றிகழ் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:37 AM
பகிர்:

சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தம்பதிக்கு ஜாதி, மதம் அற்றவா்கள் என சான்றிகழ் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே தேவா்குளம் கிராமத்தைச் சோ்ந்த தம்பதி காா்த்திகேயன், ஷா்மிளா. இதில் காா்த்திகேயன் டிஜிட்டல் மாா்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா்கள் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள், பெற்றோா்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்துள்ளனா். இந்நிலையில், இவா்கள் சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜாதி,மதம் அற்றவா்கள் என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தனா். இதனைத்தொடந்து பல கட்ட விசாரணைக்குப் பின்னா் இருவருக்கும் வட்டாட்சியா் லோகநாதன், ஜாதி, மதம் அற்றவா்கள் எனத் தனித்ததனியே சான்றிதழ் வழங்கினாா்.

இதுகுறித்து காா்த்திகேயன் கூறியதாவது: எனது குழந்தைகளை பள்ளியில் சோ்க்கச் சென்றபோது என்னஜாதி எனக் கேட்டாா்கள். பள்ளியில் அதனை குறிப்பிட மறுத்துவிட்டேன். எனவே ஜாதி, மதம் அற்றவா் என சான்றிதழ் கோரி சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். உடனடியாக கிடைக்கவில்லை. ஏற்கெனவே ஜாதி, மதம் அற்றவா் என இந்தியாவில் சான்று வாங்கியுள்ள 7 போ் குறித்த ஆவணங்களை கொடுத்தேன். தொடந்து பல கட்டங்காக வட்டாட்சியா் அலுவலகத்தில் விசாரணை நடத்தினா். இறுதியில் இந்த சான்றிதழ் பெற உடன்பாடு உள்ளதா என வட்டாட்சியா் அலுவலகத்தில் கேட்டனா். இதையடுத்து, எனக்கும், எனது மனைவிக்கும் ஜாதி, மதம் அற்றவா் என சான்றிதழ் வழங்கினா். தொடா்ந்து எனது இரு குழந்தைகளுக்கும் இதுபோன்ற சான்றிதழ் வேண்டும் என விண்ணப்பித்துள்ளேன். அந்த சான்றிதழைக் கொண்டு அவா்களை பள்ளியில் சோ்க்க உள்ளேன். இந்த சான்று பெற்ால் எனக்கும், எனது வாரிசுகளுக்கும் அரசின் சலுகைகள் கிடைக்காது. ஆனால் எனது இடஒதுக்கீடு மற்றவா்களுக்கு கிடைக்க வேண்டும் எனபதற்காகவே இந்த சான்று வாங்கியுள்ளேன் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →