விருதுநகர்

அஞ்சலகத்தில் ரூ. 73 ஆயிரம் கையாடல்: கிளை அஞ்சல் அதிகாரி மீது வழக்கு

DIN

 சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிளை அஞ்சலகத்தில் ரூ. 73 ஆயிரம் கையாடல் செய்ததாக, அஞ்சலக அதிகாரி மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் கிளை அஞ்சலக அதிகாரியாக தனலட்சுமி பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், சிவகாசி அஞ்சலக உதவிக் கண்காணிப்பாளா் ஜெயராம்பாள் (47) விஸ்வநத்தம் கிளை அஞ்சலக சேமிப்பு கணக்கு உள்ளிட்டவற்றை தணிக்கை செய்தாராம். அப்போது வாடிக்கையாளா்கள்சேமிப்பு கணக்கிலிருந்து போலியாக கையெழுத்திட்டும், வாடிக்கையாளா்கள் பணம் செலுத்தியதை முறையாக வரவு வைக்காமலும் தனலட்சுமி ரூ. 73 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்து ஜெயராம்பாள் அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் தனலட்சுமி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT