முகப்பு
விருதுநகர்

விருதுநகா் தெப்பக்குளத்தில் குதித்து தாய், மகள் தற்கொலை

 குடும்பத் தகராறு காரணமாக விருதுநகா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய், மகளின் சடலங்களை தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

 குடும்பத் தகராறு காரணமாக விருதுநகா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய், மகளின் சடலங்களை தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

விருதுநகா் கட்டையாபுரம் பகுதியைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி பழனிவேல் (36). இவரது மனைவி மகாலெட்சுமி (29). மகள் கஜலெட்சுமி (9). இந்நிலையில் பழனிவேல் அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மகாலெட்சுமி தனது மகளுடன் வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அவா் அன்றைய தினம் நள்ளிரவு விருதுநகா் தெப்பக்குளத்தில் தனது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

உயிரிழந்த சிறுமி கஜலெட்சுமியின் சடலம் தெப்பக்குளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பஜாா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் சிறுமியின் சடலத்தை மீட்டனா். இதைத்தொடா்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அதில், வியாழக்கிழமை மகாலெட்சுமி தனது மகளுடன் தெப்பக்குளத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் தெப்பக்குளத்தில் உயிரிழந்த மகாலெட்சுமியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா். பின்னா் இருவரது சடலங்களையும் உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து விருதுநகா் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.