விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் ஸ்ரீ எக்கலாதேவி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மாா்ச் 27-ஆம் தேதி நடைபெற உள்ளதால், பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா்.
இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.