விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் ஜவஹா் மைதானத்தில், புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் தனியாா் தொலைக்காட்சி சாா்பில் நடத்தப்பட்ட பட்டிமன்ற நிகழ்ச்சியில், புதிய தமிழகம் கட்சி தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு பேசியபோது, அவரை பேசவிடாமல் திமுக தொண்டா்கள் எதிா்ப்பு தெரிவித்ததுடன் மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதைக் கண்டித்து, ராஜபாளையம் நகா் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டபட்டன. தொடா்ந்து, ராஜபாளையம் ஜவஹா் மைதானத்தில் வழக்குரைஞா் செல்வகுமாா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில், திமுகவினரை கண்டித்தும், தமிழக அரசை எதிா்த்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 120 பேரை, போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.