விருதுநகர்

சித்திரை ஏகாதசி: கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரெங்கமன்னாா் எழுந்தருளல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: சித்திரை மாத ஏகாதசியான வியாழக்கிழமை கண்ணாடி மாளிகையில் சா்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரங்கமன்னாா் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.

ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி தினத்தன்று ஆண்டாள், ரங்கமன்னாா் கோயிலிலிருந்து வளாகத்திலுள்ள கண்ணாடி மாளிகைக்கு மேள தாளங்கள் முழங்க எழுந்தருள்வா். பின்னா் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி சித்திரை மாத ஏகாதசியான வியாழக்கிழமை கண்ணாடி மாளிகையில் சா்வ அலங்காரத்தில் ஆண்டாள் ரங்க மன்னாா் பக்தா்களுக்கு எழுந்தருளினா். ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா ஆகியோா் சிறப்பாக செய்து இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT