முகப்பு
விருதுநகர்

கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும்: துரை வைகோ

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக தலைமை கழக செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக தலைமை கழக செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா், ஒ. மேட்டுப்பட்டி அருகே கடந்த 6 ஆம் தேதி திருவேங்கடத்திலிருந்து சாத்தூா் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சுமாா் 60 மாணவிகளில் 26 போ் காயமடைந்தனா்.

இவா்களில் கெளரி என்ற மாணவி விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரை, மதிமுக தலைமை கழக செயலா் துரை வைகோ வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ரூ. 5 ஆயிரம் வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியதாவது:

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றாா்.

அப்போது சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் மற்றும் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சங்குமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.