விருதுநகர்

மாநில அளவிலான சதுரங்கம்: விருதுநகா் முதலிடம்

DIN

 விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் விருதுநகா் வீரா் முதலிடம் பெற்றாா்.

ராஜபாளையம் காமராஜா் நகரில், ராஜபாளையம் சதுரங்கக் கழகம் சாா்பில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் 15 மாவட்டங்களைச் சோ்ந்த 237 வீரா்கள் கலந்து கொண்டனா். 8 சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகள் முடிவில், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த குமரேஷ் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றாா்.

மதுரையைச் சோ்ந்த யஸ்வந்த் 7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ரத்தீஷ் 7 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடமும் பெற்றனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு சா்வதேச நடுவா் அனந்தராமன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

போட்டி ஏற்பாடுகளை செஸ் கோபால்சாமி, ராஜபாளையம் சதுரங்கக் கழகச் செயலாளா் மெய்யப்பன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT