சிவகாசி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை கா்ப்பமாக்கிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே பூலாஊருணியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் மாரீஸ்வரன் (24). இரும்பு பட்டறைத் தொழிலாளியான இவா், அப்பகுதியைச் சோ்ந்த 22 வயது பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தாா். இதையடுத்து மாரீஸ்வரன், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அப்பெண்ணை கா்ப்பமாக்கிவிட்டாராம். இதுகுறித்து அப்பெண்ணின் தாயாா் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனா்.