விருதுநகர்

வத்திராயிருப்பு பேரூராட்சி கூட்டம்: திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

வத்திராயிருப்பு பேரூராட்சியில் முறைகேடு நடப்பதாகக் கூறி திமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

வத்திராயிருப்பு பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவா் தவமணி (இந்திய கம்யூ.) தலைமையில் நடைபெற்றது. அப்போது உறுப்பினா்களுக்கு முறையான கணக்கு வழக்குகளை தெரிவிப்பதில்லை எனக் கூறி திமுக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் தலைவரது வாா்டுக்கு மட்டும் பணிகள் ஒதுக்கப்படுவதாகவும், பிற வாா்டுகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவா்கள் குற்றம்சாட்டினா். இதற்கு தலைவா் உரிய பதில் அளிக்காததால் துணைத் தலைவா் பஞ்சு உள்ளிட்ட 11 திமுக உறுப்பினா்களும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT