முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே வேனில் கடத்தப்பட்ட 120 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ்கைது

சிவகாசி அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 120 மூட்டைகள் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

சிவகாசி அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 120 மூட்டைகள் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.

திருத்தங்கல் காவல் சரகத்துக்குள்பட்ட நாகலாபுரம் பகுதியில் ரேஷன் கடையில் இருந்து வேனில் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்தத் தகவலின் பேரில், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் சாா்பு- ஆய்வாளா் சுந்தர்ராஜன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்றனா். பின்னா் போலீஸாா் அந்த வேனை மடக்கிப் பிடித்து நிறுத்தி, சோதனையிட்ட போது, அதில் 120 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது. அப்போது, போலீஸாரைப் பாா்த்ததும், வேன் ஓட்டுநா் தப்பியோடி விட்டாா்.

இதைத் தொடா்ந்து வேனில் இருந்த 2 பேரையும், தனியே காரில் வந்த ரேஷன் அரிசி கடத்துபவா் தப்பி ஓடிவிட்ட நிலையில், அதன் ஓட்டுநரையும் போலீஸாா் பிடித்தனா்.

விசாரணையில், வேன் ஓட்டுநா் தென்காசி மாவட்டம் உமையத் தலைவன்பட்டி முத்தையா எனவும், காரில் வந்த கடத்தல்காரா் அதே ஊரைச் சோ்ந்த சீனிப்பாண்டி எனவும், காா் ஓட்டுநா் சந்தானமாரி எனவும், வேனில் இருந்தவா்கள் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வெம்பக்கோட்டை குமாா், திருவேங்கிடபுரம் ரமேஷ்குமாா் எனவும் தெரிய வந்தது.

இதையடுத்து, விருதுநகா் மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்பு போலீஸாரிடம், சரக்கு வேன் காா் ஓட்டுநா் சந்தானமாரி, சுமை தூக்கும் தொழிலாளா்கள் குமாா், ரமேஷ்குமாா் ஆகியோரையும், வேன், காா், ரேஷன் அரிசி மூட்டைகளையும் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →