முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் பலி

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே பேராபட்டியைச் சோ்ந்த பாலகுருசாமி மகன் சிவக்குமாா் (22). டிப்பா் லாரி ஓட்டுநா். இவா், சம்பவத்தன்று டிப்பா் லாரியில் ஏற்றி வந்த எம். சாண்டை தானியங்கி மூலம் , அனுப்பன்குளம்- பேராபட்டி சாலையில் கட்டடம் கட்டப்படும் இடத்தில் கொட்டினாா். அப்போது, மேல் நோக்கி சென்ற லாரியின் ஒரு பகுதி, உயா் மின் அழுத்தக் கம்பியில் உரசியது. இதில் லாரியில் பாய்ந்த மின்சாரம் அவா் மீதும் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →