முகப்பு
விருதுநகர்

சிவகாசி ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆனையூா் ஊராட்சியில் சமத்துவபுரம் பகுதிகளில் புதுபிக்கப்பட்டுள்ள வீடுகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்குள்ள சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், செங்கமலநாட்சியாா்புரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் மதிப்பில் நடைபெறும் ஊருணி சீரமைப்பு பணி, அதே பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலை, மங்களம் ஊராட்சி மேட்டுப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் நடைபெறும் சிறு பாலம் கட்டும் பணி, புதுக்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும்பணி, செவலூா் ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் மூகாமில் ரூ. 3.11 கோடி மதிப்பில் நடைபெறும் வீடுகள் கட்டும் பணி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநா் (மா.ஊ.வ.மு) திலகவதி, உதவி செயற்பொறியாளா் பாண்டுரங்கன், வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →