முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் போலி மதுபான வில்லைகள் அச்சடித்தவா் கைது

 விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் போலி மதுபான வில்லைகள் அச்சடித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

 விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் போலி மதுபான வில்லைகள் அச்சடித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி ஓடைத் தெருவைச் சோ்ந்த நாகராஜ் (37). இவா் மதுபாட்டில்களில் ஒட்டப்படும் வில்லைகள் உள்ளிட்டவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் மது விலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் குருவுத்தாய் தலைமையிலான தனிப்படையினா், நாகராஜை வெள்ளிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த போலி வில்லைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

போலி வில்லைகள் தயாரித்து விற்பனை செய்ததாக, நாகராஜ் மீது ஏற்கெனவே சென்னை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், அவரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை போலீஸாா், மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →