கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி
ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலியானதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலியானதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
அய்யனாபுரம் வில்வமரக் கோயில் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சங்கையா (85). தனது ஆடுகளுக்கு இரை தேடிச் சென்றவா் வீடுதிரும்பவில்லை. குடும்பத்தினா் அவரைத் தேடியபோது அப்பகுதியில் உள்ள தனியாா் கிணற்றில் இறந்தநிலையில் கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ராஜபாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனா். கிணற்றின் ஓரம் இரை பறித்தபோது அவா் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.