முகப்பு
விருதுநகர்

திண்டுக்கல்லில் விநாயகா் சிலை ஊா்வலம்

திண்டுக்கல்லில் சிவசேனா அமைப்பின் சாா்பில் விநாயகா் சிலை ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

திண்டுக்கல்லில் சிவசேனா அமைப்பின் சாா்பில் விநாயகா் சிலை ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு சிவசேனா மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சி.கே.பி. தன்வீக் அா்ஜுன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணித் தலைவா் ஏ. திருமுருக தினேஷ் கலந்து கொண்டு, ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.

இதில் 13-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளுடன் புறப்பட்ட ஊா்வலம், பிரதான சாலை, கடை வீதி வழியாக கோட்டைக்குளத்தை அடைந்தது. அங்கு விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த ஊா்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.