முகப்பு
விருதுநகர்

கூலித் தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவா் கைது

திருத்தங்கலில் வியாழக்கிழமை கூலித்தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

திருத்தங்கலில் வியாழக்கிழமை கூலித்தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

திருத்தங்கல் மேலரதவீதிப் பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி பாா்த்திபன் (50).இவா் தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா் ஒருவா் வழிமறித்து, கத்தியைக் காட்டிமிரட்டி பையில் இருந்த பணத்தை கேட்டாராம். பாா்த்திபன் மறுத்ததால் மா்ம நபா் அவரை கத்தியால் குத்தி, பையில் இருந்த ரூ.50-ஐ எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றாா்.

அப்போது, பாா்த்திபன் அக்கம்பக்கம் உள்ளவா்களின் உதவியுடன் அந்நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அந்த நபா் அதே பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சங்கரலிங்கம் (27) என தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சங்கரலிங்கத்தை கைது செய்தனா். காயமடைந்த பாா்த்திபன் சிவகாசி அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →