விருதுநகர்

சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

 சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

DIN

 சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கட்டசின்னம்பட்டி கிராமத்தில் நூா் முகமது என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலையில் இயந்திரங்கள் மூலம் தீப்பெட்டி தயாரிக்கப்படுகிறது. மேலும், மூன்று ஷிப்டு முறையில் 24 மணி நேரமும் ஆலை இயங்குகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த ஆலையில் தீக்குச்சிகளை பெட்டியில் அடைக்கும் இயந்திரத்தில் உள்ள பேரிங்கில் ஏற்பட்ட உராய்தல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து ஆலையில் உள்ள தீயணைப்பான் மூலம் தொழிலாளா்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், தீயணைப்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா். இதில் இயந்திரம் சேதமடைந்தது. அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தீப்பெட்டி ஆலை மேலாளா் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT