ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பழங்குடியினா் வனப்பகுதியில் குடியேறும் போராட்டம்
வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி வனப்பகுதியில் குடியேறும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி வனப்பகுதியில் குடியேறும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பட்டுப்பூச்சி, ஜெயந்தி நகரில் 20-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில், இங்குள்ள சேதமடைந்த வீடுகளை சீரமைக்க வேண்டும். அரசு வழங்கும் இலவச அரிசியை தங்கள் பகுதிக்கு வந்து வழங்க வேண்டும். பெண்களுக்கு சுகாதார வளாகம் ஏற்படுத்த வேண்டும். பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்திற்காக வனப்பகுதியில் இருந்து தேன், இனாம் பட்டை உள்ளிட்ட 15 வகையான பொருள்களை சேகரித்து விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் வனத்துறையினா் கெடுபிடியால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பிளவக்கல் அணை கோவிலாறு வனப்பகுதியில் குழந்தைகளுடன் குடியேறி பழங்குடியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடா்ந்து வனப்பகுதியிலேயே தங்க இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.