விருதுநகர்

பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

DIN

சிவகாசி வட்டத்தில், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 கிலோ அரிசி, 1 கிலோ சா்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ. 1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது. சிவகாசி வட்டத்தில் உள்ள 143 நியாய விலைக் கடைகள் மூலம் 1,16,024 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்காக, சிவகாசி வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடை ஊழியா்கள் குடும்ப அட்டைதராா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை

வழங்கி வருகின்றனா். இந்தப் பணி வரும் 8-ஆம் தேதியுடன் நிறைவு பெறும். வரும் 9-ஆம் தேதி முதல் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என சிவகாசி வட்ட வழங்கல் அலுவலா் ஜெயபாண்டி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT