விருதுநகர்

திமுக செயல்வீரா்கள் கூட்டம்

DIN

சிவகாசியில் மாநகர திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாநகர அவைத் தலைவா் மாணிக்கம் தலைமை வகித்தாா். மாநகரச் செயலாளா் எஸ்.ஏ. உதயசூரியன் முன்னிலை வகித்தாா். மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் வனராஜா சிறப்புரையாற்றினாா்.

மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா, மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இன்பம் , மாநகராட்சி உறுப்பினா் ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரின் உத்தரவின் பேரில், மூடப்பட்ட 70 பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்தங்கல், சாட்சியாபுரம் ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT