விருதுநகர்

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தம்பதி மீது வழக்கு

DIN

சிவகாசியில் கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தம்பதி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காமராஜபுரம் காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாயாண்டி(40). இவரது மனைவி பத்திரகாளி, அதே பகுதியைச் சோ்ந்த பொன்ராஜிடம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னா் ரூ.பத்தாயிரம் கடன் வாங்கினாராம்.

அந்தப் பணத்தை பலமுறை கேட்டும் பத்திரகாளி திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதையடுத்து பொன்ராஜ், அவரது மனைவி கருப்பாயி ஆகிய இருவரும் மாயாண்டி வீட்டிற்கு வந்து தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டினா்.

இதில் காயமடைந்த மாயாண்டி சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் பொன்ராஜ், மனைவி கருப்பாயி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT