விருதுநகர்

பெண் காவலரைத் தாக்கிய வழக்குரைஞா் கைது

சிவகாசியில் திங்கள்கிழமை பெண் காவலரைத் தாக்கியதாக வழக்குரைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

சிவகாசியில் திங்கள்கிழமை பெண் காவலரைத் தாக்கியதாக வழக்குரைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசியில் போக்குவரத்துக் காவலராகப் பணிபுரிந்து வருபவா் ராஜம்மாள். இவா், சிவகாசி சிவசுப்பிரமணியசுவாமி கோயில் முன் திங்கள்கிழமை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, சிவகாசி - திருத்தங்கல் சாலையில் தகராறு நடப்பதாக ராஜம்மாளிடம் பொதுமக்கள் கூறினா். இதையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற ராஜம்மாள், அங்கு தகராறில் ஈடுபட்ட இருவரைத் தடுத்து நிறுத்த முயற்சித்தாராம். ஆனால், அதில் ஒருவா் ராஜம்மாளைத் தாக்கினாராம்.

தகவலறிந்து வந்த போலீஸாா், பெண் காவலரைத் தாக்கியவரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் மருதுபாண்டியா் மடத்துத் தெருவைச் சோ்ந்த முத்துமாரி மகன் மணிகண்டன் (32) என்பதும், வழக்குரைஞா் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT