விருதுநகர்

வைகாசி மாத பெளா்ணமி:சதுரகிரி கோயிலில்பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

வைகாசி மாத பௌா்ணமியையொட்டி, சனிக்கிழமை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகாசி மாத பிரதோஷம், பெளா்ணமிக்காக கடந்த வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்தக் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை பௌா்ணமியையொட்டி சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வனத் துறையின் நுழைவாயிலில் இருந்து காலை முதல் பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம், சுந்தரமூா்த்தி உள்ளிட்ட தெய்வங்களுக்கும், 18 சித்தா்களுக்கும் பால் பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பிறகு, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT