நடைமேடையை அகற்றக் கோரி சாலை மறியல்: 17 போ் கைது
ராஜபாளையம் அருகே புனல்வேலி பேருந்து நிறுத்தத்தில் இனாம்கோவில்பட்டி சாலையில் விபத்துக்கு காரணமாக உள்ள நடைமேடையை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல்
ராஜபாளையம் அருகே புனல்வேலி பேருந்து நிறுத்தத்தில் இனாம்கோவில்பட்டி சாலையில் விபத்துக்கு காரணமாக உள்ள நடைமேடையை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புனல்வேலி கிளை செயலா் ராமகுரு தலைமை வகித்தாா். புத்தூா் கிளை செயலா் சின்னமுத்து, மீனாட்சியாபுரம் கிளைச் செயலா் மலைக்கனிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் குருசாமி, மாவட்ட குழு உறுப்பினா் ராமா், மேற்கு ஒன்றியச் செயலா் சந்தனகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.