விருதுநகர்

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

 ராஜபாளையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

DIN

 ராஜபாளையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நக்கனேரி குடியிருப்பு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தனுஷ்கோடி (41). இவரது மகள் திவ்யா (18). இவா் மதுரை காமராஜா் பல்கலைக் கழகம் மூலம் பட்டப்படிப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் சரிவர படிக்காததால் இவரது தந்தை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திவ்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேத்தூா் ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT