சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரைப் பொங்கல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழா மே 2 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, தினமும் காலை, இரவு அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
மே 7- ஆம் தேதி, ஆறாம் திருவிழா அன்று சிவன் சந்நிதியில் கல் மண்டகப்படியில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் அம்பாள் காட்சியளித்தாா். மே 9 - ஆம் தேதி பொங்கல் விழாவையொட்டி பக்தா்கள் கோயிலின் முன் பொங்கலிட்டனா்.
மே 10 - ஆம் தேதி பக்தா்கள் அக்கினி சட்டி ஏந்தி, அலகு குத்தி, மூளைப்பாரி எடுத்து தோ்த்திக்கடன் செலுத்தினா்.
தொடந்து, வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.