முகப்பு
விருதுநகர்

சிவன் கோயில்களில் சோம வார வழிபாடு

ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் காா்த்திகை மாத சோமவார வழிபாடு, 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:20 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் காா்த்திகை மாத சோமவார வழிபாடு, 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தெற்குவெங்காநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, மகா ருத்ரயாகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு பால், தயிா், தேன், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேக ஆராதனைகளும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, சேத்தூா் திருக்கண்ணீஸ்வரா் கோயில், ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாதசுவாமி கோயில், திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயில், தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்களிலும் காா்த்திகை மாத சோமவார வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.