பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் உயா்நிலைப் பள்ளியில் நான்காவது அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் உயா்நிலைப் பள்ளியில் நான்காவது அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி தாளாளா் குருவலிங்கம் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். இதில் பள்ளி மாணவா்களின் 220 கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து வந்த மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். இதைத்தொடா்ந்து பள்ளியில் நடந்த கோபா அஷ்டமி விழாவில், மாணவா்கள் கோமாதாவுக்கு பூஜை செய்து வழிபட்டனா். பள்ளி அறங்காவலா் சித்ரா மகேஸ்வரி, முதல்வா் கமலா ஆகியோா் விழா ஏற்பாடுகளைச் செய்தனா்.