காா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை காா் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை காா் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி வீரபாண்டி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (42). காா் ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை பிற்பகல் தனது 3 மகள்களுடன் காரில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வந்த போது, டயா் வெடித்து சாலை மையத் தடுப்புச்சுவரில் மோதி காா் கவிழ்ந்தது.
Advertisement
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகள்கள் ஜீவிதா (11), பிரியதா்ஷினி (10), சங்கவி (8) ஆகிய மூவரும் லேசான காயங்களுடன் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.