குண்டுவெடிப்பைக் கண்டித்து மணிப்பூரில் பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைக் கண்டித்து, மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைக் கண்டித்து, மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில், காஞ்சிபூர் பகுதியில் உள்ள வளாகத்தின் ஆசிரியர்கள் குடியிருப்பின் நுழைவாயிலில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக காவல் துறை தெரிவித்தது.
அந்தக் குடியிருப்பில் 5 ஆசிரியர்கள் வசிப்பதாகவும், இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் மேலும் கூறினர்.
Advertisement
"எங்களுக்கு கல்வி சுதந்திரம் கொடுங்கள், சட்டத்தை நிலைநாட்டுங்கள், இந்த குண்டுவெடிப்பை நாங்கள் கண்டிக்கிறோம்" என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் கடந்த 2023, மே மாதம் குகி-மைதேயி சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோதலில் 260 போ் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கோா் இடம்பெயா்ந்தது குறிப்பிடத்தக்கது.