துரந்தரில் சாரா அர்ஜுன் எப்படி தேர்வானார்?
சாரா அர்ஜுனைத் துரந்தர் திரைப்படத்தில் தேர்வு செய்தது குறித்து...
நடிகை சாரா அர்ஜுன் துரந்தர் திரைப்படத்தில் தேர்வு செய்யப்பட்டது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த துரந்தர் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதில், நாயகன் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார். இதுவரை குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, நாயகியாக ஜொலிப்பாரா எனக் கேள்விகள் இருந்தன.
Advertisement
Advertisement
அதற்கு பதிலடியாக துரந்தர், துரந்தர் - 2 ஆகிய இரண்டு படங்களிலும் கவனிக்கத்தக்க நடிப்பை வழங்கி புகழடைந்துள்ளார். இந்த வெற்றியால் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் சாரா ஒப்பந்தம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
அதேநேரம், இனி சாரா அர்ஜுன் தமிழ்த் திரைப்படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதா? எனக் கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இவ்வளவு பெரிய திரைப்படத்தில் சாராவைத் தேர்வு செய்தது குறித்து படத்தின் நடிகர்கள் தேர்வாளரான (கேஸ்டிங் கோச்) முகேஷ் சாப்ரா கூறும்போது, “துரந்தர் திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கவனமாகத் தேர்வு செய்தோம். முக்கியமாக, கதாநாயகியாக நடிக்கக் கூடியவர் பிரபல முகமாக இருக்கக் கூடாது என நானும் இயக்குநர் ஆதித்யா தரும் உறுதியாக இருந்தோம்.
இதற்கிடையே, ரன்வீருக்கு ஜோடியாக என்னை நடிக்க வைங்க என பல நடிகைகள் எனக்கும் ஆதித்யாவுக்கு விருப்பம் தெரிவித்தனர். ஆனால், புதிய முகமாகவும் பாகிஸ்தான் பெண் என நம்பும்படியான தோற்றத்திலும் இருக்க வேண்டுமென 1200க்கும் மேற்பட்ட பெண்களை ஆடிசன் செய்தோம். அதில், கலந்துகொண்ட ஒருவர்தான் சாரா அர்ஜுன். அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் பாலிவுட்டுக்கு புதிது. கண்டிப்பாக இது ஆச்சரியப்படுத்தும் என நம்பினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெண்களுக்கு மத்தியில் சாரா அர்ஜுன் தேர்வாகியிருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Information has been released about actress Sara Arjun being cast in the film Durandhar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.