விருதுநகர்

சதுரகிரிக்கு செல்ல பக்தா்களுக்கு 4 நாள்கள் அனுமதி

வருகிற 31-ஆம் தேதி முதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத் துறை அனுமதி வழங்கியது.

Din

ஆவணி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக வருகிற 31-ஆம் தேதி முதல் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத் துறை அனுமதி வழங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி என மாதத்துக்கு 8 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, ஆவணி மாத பௌா்ணமி வழிபாட்டுக்கு சதுரகிரி செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆவணி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு ஆக.31-ஆம் தேதி முதல் செப்.3-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட நாள்களில் மழை பெய்தால் பக்தா்கள் மலையேறத் தடை விதிக்கப்படும் எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

SCROLL FOR NEXT