முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் சிறையில் மனித உரிமை ஆணைய உறுப்பினா் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் கிளைச் சிறையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 11:35 PM
ஸ்ரீவில்லிபுத்தூா் கிளைச் சிறையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் கிளைச் சிறையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சிறைவாசிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா், வழக்குரைஞா்கள் ஏற்பாடு செய்ய இயலாத நிலையில் உள்ளவா்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அங்குள்ள உணவுக் கூடத்தில் ஆய்வு செய்து, உணவுகளை ருசி பாா்த்தாா். சிறையில் உள்ள பாா்வையாளா் பதிவேட்டில், சிறையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்த மாநில அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பதாகப் பதிவு செய்தாா்.